இஸ்ரேல் – பாலஸ்தீன்

இஸ்ரேல் – பாலஸ்தீன்

பாலஸ்தீன மக்களை கைது செய்யும் இஸ்ரேலிய படைகள் !

இஸ்ரேலிய படைகள் இன்றையதினம் 12 பாலஸ்தீன மக்களை அவர்களது வீடுகளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக காசா தகவல்கள் தெரவிக்கின்றன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3415 ஆக உயர்வடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய ஒரு யுவதியையும் சோதனைச் சாவடியில் படைகள் தடுத்து வைத்ததாக அவர்கள் கூறினர்.

Nablus, Tubas, Jenin, Hebron மற்றும் Qalqilya ஆகிய பகுதிகளிலும் கைது நடவடிக்கை தொடர்ந்ததாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அத்துடன் சோதனையிட்ட வீடுகளையும் படைகள் சூறையாடியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் – வெளியுறவு கொள்கைகள் !

இஸ்ரல் பாலஸ்தீன் பிரச்சினை உச்சமடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் தேசம் திரையின் இந்த காணொளி பாலஸ்தீனின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பில் அலசி ஆராய்கிறது.

[தேசம் திரையின் புதிய YouTubeபக்கத்தை Subscribeசெய்வதன் மூலம் நமது புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க முடியும்.]

 

https://youtu.be/B2vLXZaTfo0?si=biC5NLt-utYl4YKh

ஹமாஸ் தலைமை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம் – இஸ்ரேல்

ஹமாஸ் தலைமை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம் என இஸ்ரேல் படை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பில் வெள்ளியன்று இரவு இஸ்ரேல் படைத்துறை பேச்சார் டானியர்ஹகாரி தெரிவிக்கையில்,

ஹமாஸ் அமைப்பின் தலைமைகள் காசாவிலும் உலகம் முழுவதும் பின்தொடரப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஹகாரியின் எச்சரிக்கை கத்தார் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஹமாஸ் தலைமைக்கு இஸ்ரேல் படை அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பின்தொடரும் என்று சமிக்ஞை செய்கிறது.

இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை ஒழிப்பதற்கான பல புகழ்பெற்ற இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு இது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

 

காசாவின் அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலால் கைது !

காசாவின் அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர், முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

மருத்துவமனையின் இயக்குநர் காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த வேலையிலேயே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்ஷிபா மருத்துவமனை ஹமாசின் பிரதான தளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, மருத்துவரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணைக்குட்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவரது முகாமைத்துவத்தின் கீழ் மருத்துவமனையில் அதிகளவில் ஹமாசின் செயற்பாடுகள் காணப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

 

இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு விமானக்குண்டுவீச்சினை மேற்கொண்டவேளை மருத்துவனையில் காணப்பட்ட நிலைமை குறித்து மருத்துவர் சர்வதேச ஊடகங்களிற்கு பரவலாக தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காஸாவில் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் !

காஸாவில் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

 

இதனையடுத்து, காஸா மீதான தாக்குதல்களை நான்கு நாட்களுக்கு இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

 

அத்துடன், ஒவ்வொரு 10 பணயக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

இதனால் ஹமாஸ் அமைப்பினர் விரைவில் பணயக்கைதிகளை விடுவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஹமாஸ் படையினர் கடத்திச்சென்ற பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கத்தார் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது.

 

ஒரு வார கால தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கத்தாரின் வௌியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி (Majed al-Ansari) குறிப்பிட்டுள்ளார்.

 

இரு தரப்பும் ஒப்பந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதில் கத்தார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மஜீத் அல்-அன்சாரி கூறியுள்ளார்.

 

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கான முதற்படி என குறிப்பிட்டுள்ள அவர், பல தசாப்தங்களாக நீடித்து வரும் மோதலை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான விரிவான அரசியல் செயன்முறையாக இது மாறும் எனவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

 

எவ்வாறாயினும், பணயக்கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் ஹமாஸூக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

 

நாங்கள் போரில் இருக்கிறோம். எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை போரைத் தொடருவோம் என அவர் கூறியுள்ளார்.

“பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்” – இந்திய பிரதமர் மோடி

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் பேசி இந்திய பிரதமர் மோடி, காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://x.com/narendramodi/status/1714986693097664745?s=20

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்

“பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். இந்த உரையாடலின்போது, பாலஸ்தீன பகுதிகளில் வன்முறையினால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், பயங்கரவாம் குறித்த கவலைகளை பகிர்ந்துகொண்டோம். மேலும் இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாடும் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

 

நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் ராக்கெட் குண்டு தாக்குதல்தான் இதற்கு காரணம் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். ஆனால், இத்தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தவில்லை என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பட தெரிவித்தார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர்ப்பதற்றத்திற்கு நடுவிலும் கூட தாய்நாடு திரும்ப விருப்பம் காட்டாத இலங்கையர்கள் !

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர்கள் எவரேனும் திரும்பி வர விரும்பினால், அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, ஆனால் மோதல் இடம்பெறும் காசா பகுதிக்கு அண்மித்த பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் கூட அங்கு தங்குவதற்கு அதிக விருப்பத்துடன் உள்ளனர்.

நாடு திரும்ப விரும்பும் எந்தவொரு இலங்கையர்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸா பகுதியை அண்மித்துள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” – ஈரான், அரேபியா அறிவிப்பு !

ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

Iran President, Saudi Crown Prince discuss Gaza in first talk since ties  restored - India Today

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஈரானிய அரசு ஊடகம்,

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” என இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது. அப்போது, “நடந்துகொண்டிருக்கும் போரினை தடுக்க சர்வதேச அளவில் சவுதி புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது” என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் உறுதியளித்தார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதையும் சவுதி விரும்பவில்லை” என்றும் ஆலோசனையில் முகமது பின் சல்மான் கூறியிருக்கிறார். சவுதி மற்றும் ஈரான் இடையேயான இந்தப் பேச்சுவார்த்தைகள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த மரண தண்டனை பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இதனால், சவுதி – ஈரான் உறவில் விரிசல் ஏற்பட ஒருகட்டத்தில், ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா பகிரங்கமாக அறிவித்தது.

இரு நாடுகளையும் மீண்டும் இணைக்க உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டின. இதன்பின் கடந்த மார்ச் மாதம் சீனா இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்துவைத்தது. அதன்படி, ஈரானும், சவுதி அரேபியாவும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன. தொடர்ந்து இரு நாடுகளிலும் அடுத்த இரண்டு மாதங்களில் தூதரகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சமாதானங்களுக்கு பிறகு முதல் முறையாக இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் மேலும் சர்வதேச கவனம் விழுந்துள்ளது.

 

“பாலஸ்தீன் – இஸ்ரேல் மோதலுக்கு அமெரிக்காவே காரணம்.” – புடில் சாடல்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் என இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான், இந்த போருக்கு மூல காரணம் என்று ரஷ்யா விமர்சித்துள்ளது.

 

இஸ்ரேல் – பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிரச்சனையில், தற்போது மற்ற நாடுகள் தலையிட்டு வருகின்றன. அமெரிக்கா ஏற்கனேவே போர் கப்பல்களை, ஆயுத தளவாடங்களை அங்கே அனுப்பி உள்ளது.

இதில் தற்போது மறைமுகமாக சவுதி – ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்க இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை.

 

இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இந் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம்.

அமெரிக்கா சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றது. தாங்கள் வைத்ததுதான் சட்டம், நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது.

இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம்.

 

ஐநா இந்த விவகாரத்தில் தனிப்பட்ட பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேலும் அமெரிக்காவும் மதிக்கவில்லை.

தனி பாலஸ்தீனம் மட்டுமே இந்த மோதலுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். பாலஸ்தீன மக்களின் தனிப்பட்ட கவலைகள், பிரச்சனைகள் பற்றி அமெரிக்கா யோசிக்கவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் விமர்சித்துள்ளார்.

பாலஸ்தீன ஹமாஸிற்கு ஆதரவளிப்பதாக ஈரான், சிரியா, லெபனான் அறிவிப்பு!

ஹமாஸ் போராட்ட குழுவினருக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர்.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள்  உள்ளனர்.’’ என தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கூறியுள்ளன. இந்த சூழலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என கட்டார் கூறியுள்ளது.