“ஈஸ்ரர் ஞாயிறு” இரவு பிரார்த்தனைகளை ஒட்டி குடாநாட்டில் இன்று சனிக்கிழமை இரவு ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு தேவாலயங்களில் இடம் பெறும் நள்ளிரவுப் பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்ற வசதியாக ஊரடங்கை நீக்குமாறு யாழ். ஆயர் அதி வண. தோமஸ் செளந்தரநாயகம் யாழ். படை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.அதனை அடுத்து ஊரடங்கு இன்று இரவு நீக்கப்படுவதாக பலாலி தலைமையக ஊடகத்துறை நேற்றிரவு தெரிவித்தது.