கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம்!

கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

 

மருந்து தயாரிப்புக்காக மாத்திரம் கஞ்சா பயிர் செய்கை திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

இதன் முதற்கட்ட செயற்திட்டத்தை இந்த வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *