வவுனியா முகாம்களில் உள்ளவர்கள் குறித்து ஐ நா கவலை

neel.jpgஇலங்கையின் வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறி தற்போது வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் நிலை குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கானா ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள முகாம்களுக்கு விஜயம் செய்துவிட்டு வந்த பிறகே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். அங்கு குறைந்த நிலப்பரப்பில் பலர் தங்க வைக்கப்பட்டிருப்பது அங்குள்ள மக்களிடையே ஒரு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் அரசு அங்குள்ள மக்களுக்கு உணவு வசதிகளையும், மாணவர்களுக்கு பாடசாலை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் எனினும் மேலும் வசதிகள் அங்கு தேவைப்படுகின்றன என்றும் நீல் பூன் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • MUKILVANNAN
    MUKILVANNAN

    NEIL DONT KEEP ON WORRING YOUR SELF, DO SOMETHING TO SECURE INNOCENT CIVILIONS OTHERWISE RAJAPAKSA AND …………POISENT THEM, THE LONGER YOU DELAY THE DANGER WILL RISE. SO PLEASE ACT NOW.

    Reply