யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 25 பெண்களுக்கு பிணை !

யாழ்ப்பாணம் புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேயரில் 25 பெண்களை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 6 ஆண்களும் விளக்கமறிலில் வைக்க, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சமபவத்தில் காயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடு, மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரியவருகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் 25 பெண்கள் உட்பட 31 பேரை நேற்றைய தினம் கைது செய்த நிலையில் அவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது 25 பெண்களையும் பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம் மிகுதி 6 ஆண்களையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *