ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் கைது !

மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாலைத்தீவுக்கு அருகில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து ஜூன் 22 அன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 48 வயதுடையவர்களாவர்.

அவர்கள் 926 கிராம் ஹெரோயின் வைத்திருந்தனர்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *