“பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை நாட்டிற்குள் சுதந்திரமாக கொண்டு வருவதற்கு இனி இடமில்லை.” – மத்திய சுற்றாடல் அதிகார சபை

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருகையில் அதனை உரிய அனுமதியுடன் மாத்திரமே கொண்டுவர தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுங்கத்துறையுடன் இணைந்து இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (ஜூன் 5) கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி தொடர்பான வரம்பற்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நிர்வகிப்பது தொடர்பில் சுங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை நாட்டிற்குள் சுதந்திரமாக கொண்டு வருவதற்கு இனி இடமில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மூலப்பொருட்களை யாரேனும் இலங்கைக்கு இறக்குமதி செய்தால் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அவற்றை அகற்றுவதில் திருப்தி இல்லை என்றால், மீண்டும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *