போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் யாழ்ப்பாணத்தில் கைது !

உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவன் ஒருவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான்.

இந்தச் சிறுவன் பற்றிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் நுகர்ந்திருந்த நிலையில் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.

தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் போது அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதே நேரம் நேற்று (05.06.2023) யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *