1,14,000 பேருக்கு தே. அடையாள அட்டை

மேல்மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஒரு இலட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள் ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்தது.

மேல்மாகாணத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள சகல விண்ணப்பதாரி களுக்கும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஏ. பி. தர்மதாச தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் கூடுதலானவர்கள் அடையாள அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இருந்து 51 ஆயிரம் பேரும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 39 ஆயிரம் பேரும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 23ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 50 ஆயிரம் பேருக்கு இதுவரை தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார். தேர்தலை முன்னிட்டு மேல் மாகாண விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *