விமல் வீரவங்சவிடம் இழப்பீடு கோரி மேன்முறையீடு !

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இழப்பீடு கோரி மேன்முறையீடு செய்த்துள்ளார்.

 

அண்மையில் விமல் வீரவன்சவினால் எழுதி வெளியிடப்பட்ட புத்தகம் தனக்கும் இராணுவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அவர் இவ்வாறு செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

“9 மறைக்கப்பட்ட கதை” என்ற நூலை விமல் வீரவன்ச வெளியிட்டிருந்தார்.

குறித்த புத்தகம் , காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் உள்ள இரகசியங்களை அம்பலப்படுத்த எழுதப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னணியில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமைக்கு நாடு செல்ல வழிவகுக்கும் எனவும் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *