இலங்கையின் பிரபல கலைஞர் வீட்டில் இறந்த பெண் – நாடாளுமன்றில் மனோ கணேசன் கவலை !

இலங்கையின் பிரபல கலைஞர் சுதர்மா ஜெயவர்தனவின் வீட்டில் பணிபுரிந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஏ.ராஜ்குமாரியின் மரணம் தொடர்பில் கவலை தெரிவித்தார்.

பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இறந்த வீட்டுப் பணிப்பெண்ணின் உடலை தோண்டி எடுக்க புதிய நீதித்துறை அதிகாரி விசாரணையை கோறியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நிபுணர்கள் குழுவிடம் புதிய விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குவதாக உறுதியளித்தார்.

மே 11 அன்று கலைஞரின் வீட்டில் திருடப்பட்டமை தொடர்பான புகாரின் பேரில், மே 15 அன்று வீட்டுப் பணியாளர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்,

முறைப்பாட்டையடுத்து, பதுளை தெமோதர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பெண் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *