பொதுமக்கள் காணிக்குள் பௌத்த விகாரை – யாழ், வலிவடக்கு தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம் !

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ், வலிவடக்கு தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *