பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் – பெண் ஒன்றாக அமரதடை – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விசனம் !

ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜீவ அமரசேனவின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் புதிய கொள்கையொன்றை அமுல்படுத்தியதால் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் ஒன்றாக அமரக்கூடாது எனவும் பல்கலைக்கழகத்தின் பெஞ்சுகள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக, வளாகத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் அடக்குமுறையை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழக உபவேந்தரின் செயற்பாடுகள் தவறானவை எனவும், அது பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *