கட்டார் நாட்டின் அபிவிருத்தி க்கான இராஜாங்க அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் (2ம் திகதி) இலங்கை வரவுள்ளது.
இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, உட்பட முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கு மிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படுமென தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் கட்டாரின் முதலீடுகளை இலங்கையில் அதிகரிப்பது குறித்தும், அதற்கான சாத்தியப் பாடுகள் தொடர்பாகவும் கட்டார் அமைச்சர் கூடிய கவனம் செலுத்தவிருப்பதாகவும் வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.