வன்னியில் இடம்பெற்றுவரும் மிக மோசமான போர் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 512 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் வழித்துணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நோயாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட “கிரீன் ஓசன் ஓ’ கப்பல் நேற்று இரவு 8.35 மணியளவில் புல்மோட்டையை வந்தடைந்தது.
புல்மோட்டையை வந்தடைந்த “கிரீன் ஓசன் ஓ’ கப்பலில் இருந்த 512 நோயளர்களையும் 20 செஞ்சிலுவைச் சங்க சர்வதேசப் பணிப்யாளர் 8 படகுகளை வேலைக்கு அமர்த்தி கரைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதுவரை செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழு முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் மோதல் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 5500க்கு மேற்பட்டோரை கப்பல் மூலம் அழைத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவினரால் அழைத்துவரப்படும் நோயாளர்கள் திருகோணமலை, புல்மோட்டை, கந்தளாய், பதவியா மற்றும் வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.