பெப்ரவரி 11ஆம் திகதி தொடக்கம் மார்ச் 14 ஆம் திகதி வரை திருகோணமலைக்கு முல்லைத்தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு திருகோணமலை, கண்டி, கொழும்பு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நண்பகல் 12 மணிவரை 46 ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலை ஆஸ்பத்திரியில் 32 பேரும் கண்டிபோதனா வைத்தியசாலையில் 09 பேரும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் 05 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதிதாக 33 குழந்தைகள் பிறந்துள்ளன. திருகோணமலைக்கு கூட்டி வரப்பட்ட 3,635 முல்லைத்தீவு பொதுமக்களில் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே 3,236 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்விபரம் வருமாறு;
வவுனியா ஆஸ்பத்திரி, நலன்புரிமுகாம்2,019
மன்னார் ஆஸ்பத்திரி908
கொழும்பு தேசிய வைத்தியசாலை61
கண்டி போதனா வைத்தியசாலை 54
மகரகம போதனா வைத்தியசாலை01
பொலநறுவை ஆஸ்பத்திரி 100
கந்தளாய் ஆதார வைத்தியசாலை57
தம்பலகமம் ஆஸ்பத்திரி 35
நேற்று சனிக்கிழமை வரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் பெப்ரவரி11 தொடக்கம் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.