பிரதியமைச்சர் பாயிஸை எம்.பி. பதவியிலிருந்து நீக்க நேற்று இடைக்கால தடை

கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தார்.

பிரதியமைச்சர் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அல்லவென்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி மூலம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறும் கோரியே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இவரை நீக்குவதற்கு எதிரான தடையுத்தரவு எதிர்வரும் 8ம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க. மற்றும் மு.கா. ஆகிய கட்சிகளுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *