30 ஆயிரம் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க திட்டம்

இவ்வருட முடிவுக்குள் நாடளாவிய ரீதியில் 30,000 சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க தொழிலமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு இச் செயற் திட்டத்தை நடைமுறை ப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிராமியப் பிரதேசங்களில் நிலவும் தொழில் வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; மேற்படி சுய தொழில் முயற்சிகளில் குழுக்களாக இணைந்து செயற்பட விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புடனான அமைச்சு ஏற்படுத்தித் தருமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுயதொழில் முயற்சிகளுக்குக் கடன் வழங்கும் திட்டமொன்றை தொழிலமைச்சும் மக்கள் வங்கியும் இணைந்து செயற்படுத்தி வருகின்றன. இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ, அமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹஹேவா உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *