தனியார் வைத்தியசாலைகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் சடலங்களை வைத்தியசாலைக் கட்டணம் செலுத்தும் வரையில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரியின் சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நோயாளிகளின் சடலங்களை வைத்தியசாலைக் கட்டணம் செலுத்தும் வரை தனியார் வைத்தியசாலைகளில் வைப்பது தொடர்பான சட்ட நிலைமைகள் தொடர்பான வார இறுதி நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டணத்தைச் செலுத்தும் வரை எந்த ஒருவரின் உடலையும் மருத்துவமனை நிர்வாகத்தால் தக்கவைக்க முடியாது எனவும், மரணம் குறித்து மருத்துவமனைப் பிரிவின் மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லாவிட்டால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 269 முதல் 270 வரை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக பிடிவிறாந்து அல்லது சம்மன்களை வழங்குவதற்கு மரண விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.