தென்னிலங்கை மக்கள் கொந்தளிக்கும் உயர் பாதுகாப்பு வலய சட்டம் 1990ஆம் ஆண்டிலிருந்தே தமிழர் பகுதிகளில் உள்ளது – சுமந்திரன்

கொழும்பில் 2 நாட்களுக்கு முன்னர் உயர் பாதுகாப்பு வலயத்தை வரையறுப்பது ஒரு புதிய நடைமுறையல்ல என்றும் குறைந்தது 1990ஆம் ஆண்டிலிருந்தே வடக்கு மற்றும் கிழக்கில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இத்தகைய சட்டவிரோத எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

“சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் பிரகடனப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இருந்தாலும் வரலாற்று ரீதியாக 1990 ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான வலயங்கள் இருந்தது.

அதனை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2003 இல் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பழமையானது. குறித்த வழக்கு டிசம்பர் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது” என அவர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *