பொருளாதார நெருக்கடி – பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை விற்ற தாய் கைது !

பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்த இளம் தாய்.நேற்று மாலை அனுராதபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் விற்பனை செய்ய உதவிய தாதி ஒருவரின் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், குழந்தையின் தந்தை, அரசாங்க வைத்தியசாலையின் தாதி, வைத்தியசாலையின் உதவியாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். .

மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெபிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தமக்கு ஒன்றரை வயது மகனும் இருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *