கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் பயணிகள் படகு சேவை நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை – ஹீனெடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயக்கப்படுவது இங்கு சிறப்பு அம்சம்மாகும்.
மேலும் சூரிய சக்தி மூலம் செயல்படுவதால் எரிபொருள் செலவு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாளாந்தம் அலுவலக நேரங்களில் இந்த படகு சேவை இயங்கும் என்பதுடன் படகொன்றில் எட்டு பேர் வரை பயணிக்க முடியும்.
அத்துடன் நாட்டின் உள்ளக கால்வாய்கள் ஊடாக மேலும் பல்வேறு படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடதக்கது