ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் சி.வி.விக்கி, கஜேந்திரகுமார் – தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்கிறது கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.

……………………….

கடந்த நல்லாட்சி அரசு காலத்திலும் சரி, 2009ஆம் ஆண்டு முதல் மகிந்தராஜபக்ச தரப்பினரையும் எதிர்க்கவும் சரி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இரா.சாணக்கியன் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு இணைந்து செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்க தமிழர் தேசியபிரச்சினைக்கு தீர்வு வழங்ககூடிய தலைவர் என கூறி வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் இணைந்தது தொடர்பில் இரா.சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *