முல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கென 1265 மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களும், 52 வகையான மருந்துப் பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்க ளுக்கோ மருந்து வகைகளுக்கோ எவ்விதத் தட்டுப்பாடுகளும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் அவ்வாறு தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவர்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் மஹிந்த சமர சிங்க தலைமையில் நடை பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில், வெளி விவகார அமைச்சின் செய லாளர் கலாநிதி பாலித கொஹன மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக் கார மற்றும் சுகாதார அமைச்சின் (மருந்து விநி யோகம்) பிரதிப் பணிப் பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-
முல்லைத்தீவில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கென கடந்த மூன்று வாரங்களுக்குள் 1265 மெற்றிக்தொன் உணவுப் பெருட்களை அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளது. கடந்த 17ம் திகதி முதல் 19ம் திகதி வரையான மூன்று நாட்களுக்குள் மாத் திரம் மூன்று தடவைகள் 515 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. அதில் 15 மெற்றிக்தொன் மரக்கறி வகைகளும் அடங்கும்.
அரசாங்கம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை அனுப்பிவைக்கும் அதே சமயம், உலக உணவுத் திட் டம் உதவிகளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவிலுள்ள மக்களுக்குத் தேவையான ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கடந்த 5ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அங்கு தேவையான மருந்து பொருட்கள் களஞ்சியப்ப டுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார்.
கடந்த மூன்று தினங்களுக்குள் அண்டிபயோடிக் உட்பட 52 வகையான மருந்துப் பொருட்கள், திரு கோணமலையிலுள்ள பிரா ந்திய மருத்துவ விநி யோகப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை திருமலையிலுள்ள கடற்படையினருக்கு ஒப்ப டைக்கப்பட்டு திருமலை பிராந்திய கடற்படைத் தளபதியின் வழிகாட்டலின் தேவைக்கேற்ப உரிய நேரத்தில் அனுப்பிவைக்கப்படும் என்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரா ந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ரி. வரதராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தப் பிரதேசத்தில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடுகள் நிலவுவதாக புலிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறுபட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும் அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்கள் இரண்டின் “கடிதத் தலைப்புக்கள்” ஒன்றுக்கு ஒன்று முரணானதாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி னார். அந்தத் கடிதத் தலை ப்புக்களில் எழுத்துப் பிழைகள் இருப்பதையும் ஆதாரமாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவை போலியானவை என்றும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்தலியனகே முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி. வரதராஜாவுடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது பெயர்பயன் படுத்தப்பட்டு மாறுப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவதாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.