தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் – பட்டங்கள் பறக்க விட்டு கவனயீர்ப்பு போராட்டம் !

வடக்கு-கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50 நாளையிட்டு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று (திங்கட்கிழமை ) பட்டங்கள் பறக்க விட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு  வேண்டும் என்ற 100 பேராட்டத்தின் 50 வது நாள் போராட்டத்தையிட்டு 8 மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தபோராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பல கோரிக்கையடங்கிய வாசகங்கள் கொண்ட பட்டங்கள் தயார்படுத்தப்பட்டு அதனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *