1996 – இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று !

யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *