எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது கத்திக்குத்து !

எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இராணுவ அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

05 நாட்களுக்குப் பின்னர் இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததாகவும், சில மணித்தியாலங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும் எம்பிலிபிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுப்படுத்த தலையிட்டபோது, ​​கலவரக்காரர் ஒருவர் இராணுவ வீரரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பணியில் ஈடுபட்டிருந்த சிப்பாயின் துப்பாக்கியை நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளதாகவும் அம்பிலிபிட்டிய காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் எம்பிலிபிட்டிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *