சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க எதிர்க்கட்சி தயார் !

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் தனது தனிப்பட்ட கருத்தை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சியாகிய நாம் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. ஜனாதிபதி பதவியும் பிரதமர் பதவியும் கிடைத்தால் சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளோம். அந்த சவாலை ஏற்றுக்கொள்ள முதுகெலும்பு இருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இன்னும் நாட்டின் முன்னேற்றத்திற்காக எதுவும் நடக்கவில்லை. எதிர்க்கட்சியாகிய நாம் இந்த நேரத்தில் சவாலை எதிர்கொள்ள வேண்டும். எப்போது ஆட்சியை கைப்பற்றினாலும் வீழ்ச்சியடைந்த நாட்டையே பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.

“நமது நாடு திவாலாகிவிட்டதாக மறைமுகமாக கூறிவிட்டோம். இந்த நிலையிலும் முட்டாள்தனமான அரசாங்கத்தை அமைந்துள்ளனர். இம்முறை B அணியை விளையாட அனுப்பியுள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *