“அரசியல்வாதிகளைப் பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும்.” – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடைய இடமளிக்கக்கூடாது என அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும் கல்வித்துறை வீழ்ச்சியடைந்தால் நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படித்த, அரசியல்வாதிகளைப் பின்பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியல்வாதிகளை நாடி தகுதியுள்ளவர்கள் வேலை தேடும் கலாசாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகள் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய நாடுகளில் தகுதியுடையவர்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைப் பெறுவதற்கான அமைப்புகள் நடைமுறையில் இருப்பதால், அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதில்லை. எனவே நாட்டின் கல்வித் துறை வீழ்ச்சியடைவதை குடிமக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *