உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்தால் தேவைப்படின் அவரைக் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு மறைமாவட்ட சமூக உறவுப் பிரிவின் தலைவர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் தான் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் சாட்சியமளிக்கும் போதே குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் இக்கோரிக்கையை முன்வைத்ததாக அருட்தந்தை கிரிஷாந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தி ருந்ததை அடுத்து அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவே பொறுப்பு என அமைச் சர் பிரசன்ன ரணதுங்க முன்னர் தெரிவித்திருந்த கருத்தைத் தொடர்ந்து கத்தோலிக்க மதகுரு இதைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அமைச்சர் ரணதுங்க முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ரணதுங்கவை சிஐடிக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பின்னர் சிறிசேனவிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் நான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தேன் என அருட்தந்தை கிரிஷாந்த தெரிவித்தார்.