வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ள டெங்கு தொற்று !

நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 985 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 147 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், 102 தொற்றாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேரும், வவுனியாவில் 10 பேரும், மன்னாரில் 9 பேரும், முல்லைத்தீவில் 6 பேரும் டெங்குத் தொற்றால் பாதிககப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெங்குப் பரவலில் கொழும்பு மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. அங்கு 245 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டனர். புத்தளத்தில் 242 பேரும், மட்டக்களப்பில் 125 பேரும், திருகோண மலையில் 108 பேரும் டெங்கால் பாதிக்கப் பட்டனர்.

எனினும், கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் எவரும் டெங்குத் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *