“போராடுவோர் மீது தடியடி நடத்துங்கள்.” – ஆளுங்கட்சி உறுப்பினர் ஆலோசனை !

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதால் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தின் காரணமாக ஜே.வி.பி.யின் பாராளு மன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க, விஜித ஹேரத் ஆகியோர் முட்டை மற்றும் தடிகளால் தாக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இது போன்ற போராட்டங்களில் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஒரே வழி, தடியடிதான் என்றும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *