வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் தீபிடிப்பு; உடைமைகள் நாசம்

poonthotham.jpgவவுனியா பூந்தோட்ட அகதிகள் முகாம் நேற்றுக் காலை தீக்கிரையானது. திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அகதிகள் தங்கியிருந்த கொட்டில்கள் முற்றாக எரிந்ததுடன் மக்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ முகாம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தீவிபத்து காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். தீ பரவுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன.

1990 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பூந்தோட்ட முகாமில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களே உள்ளனர். காலை 10.30 மணியளவில் இத்தீவிபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள், காயமடைதல் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *