“வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு’

srilanka-students.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் 20,000 மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்; வவுனியா மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடைய கல்விச் செயல்பாட்டிற்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முழுமையான கல்வி செயற்பாடுகள் நடைபெறவில்லை.

எட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாற்று திட்டங்களை ஏற்படுத்தினோம். ஆனாலும், திருப்திகரமான கல்விச் சூழல் காணப்படவில்லை. நிரந்தர மாணவர்கள், இடம் பெயர்ந்து வந்துள்ள மாணவர்கள், மெனிக்பாமில் குடியேற்றப்பட்ட மாணவர்கள் என மூன்று தரத்தையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். நலன்புரிநிலையங்களில் ஏழாயிரம் மாணவர்களும் 373 ஆசிரியர்களும் உள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்கள் நலன்புரி நிலையங்களைவிட்டு வெளியேற முடியாது. அவர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்குரிய வேதனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

வலயக்கல்விப்பணிப்பாளர், நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள சிறுவர்களுக்குரிய கல்வி நடவடிக்கையில் “யுனிசெப்’ கவனம் செலுத்தியுள்ளது. நலன்புரி நிலையத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு சிறுவர்களுக்கான கல்வி செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கல்வி செயற்பாட்டிற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வசதிகளையும் யுனிசெப் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *