கணவருடன் தகராறு – 21 வயது மனைவி தற்கொலை – காத்தாங்குடியில் சம்பவம் !

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பாலமுனை வீதி மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாத குழந்தையின் தாயான பார்த்திமா றிமா (21) என்பவரே தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக நேற்று மாலை (30) மீட்கப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்குமிடையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட குடும்பத்தகறாற்றினால் சம்பவதினத்தன்று தனது கைக்குழந்தையினை அவரின் கணவர் வெளியில் எடுத்துச்சென்று சற்று நேரத்தின் பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் அறையினுள் குறித்த பெண் தனக்குத்தானே தூக்கிட்டிருந்த நிலையில் அயலவரின் உதவியுடன் தூக்கிலிருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வைத்தியர்கள் இறந்து விட்டதனை உறுதிப்படுத்தியதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *