இலங்கைக்கு மனிதாபிமான உதவி செய்யத்தயார்: பிரான்ஸ்

_dr-bernard-kouchner.jpgஇலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயார் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கோச்சுனர் தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரங்களால் பிரான்ஸ் அரசாங்கம் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய போது பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் பொதுமக்கள் சிக்குண்டு இருப்பதாகவும், உடனடியாக பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    அவர் மனிதர். ஆனால் அதை இந்த இரு மிருகமும் ஏற்க்க வேண்டுமே.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    dear palli you are wrong he is not manithar if you was in france in april 2007 you would have known about him{french president sacosi}

    Reply