இலங்கையின் வடக்கில் இடம்பெறுவது விடுதலைப் போராட்டமல்ல. ஒரு தீவிரவாதி தனது கனவை நனவாக்க அப்பாவிப் பொதுமக்களையும் சிறுவர்களையும் பணயம் வைத்து மேற்கொண்ட பயங்கரவாதப் போராட்டமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாள வெளிவிவகார அமைச்சர் உபேந்திரா யாதேவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நேபாள வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்றுக் காலை ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி நேபாள இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.
பொதுமக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதோடு சிறுவர்களின் கல்வியை இருளில் தள்ளி வெற்றி பெறக்கூடிய விடுதலை எதுவும் கிடையாதென இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டிய நேபாள வெளிவிவகார அமைச்சர், புலிகள் சிறுவர்களை மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதனையிட்டு தனது அதிருப்தியைத் தெரிவித்தார்
palli
அப்படியா?? சொல்லவே இல்லை. அதே போல் அரசு வன்னியில் நடத்துவதும் பயங்கரவாத ஒழிப்பல்ல, இன அழிப்பு தெரியுமோ.