பாகிஸ் தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் குறித்து இந்திய அரசு ஆராய்வதாகத் தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசு எடுத்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
“இன்னமும் இது குறித்த தெளிவான தகவல் எதுவும் இல்லை. எனினும் இதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என அவர் ராஜ்யசபையில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுப் பிரிவு தென்னாசியாவின் பல நாடுகளில் செயற்படுவதை தாங்கள் அறிந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்காக விஸாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.