மாணவர் குழுக்கள் மோதல்: களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது

uni-of-kalaniya.jpgகளனி பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் நேற்றும் தொடர்ந்ததையடுத்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றதால் மாணவர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அதில் ஒருவர் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் தெரிவித்தார். மோதல்களை அடக்குவதற்காகக் கலகம் அடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டதுடன் கண்ணீர்ப் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ளோர் இன்று காலை 7 மணிக்கு முன்னர் வெளியேற வேண்டுமெனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடிவிடுவதென நிர்வாகம் கூடி தீர்மானமெடுத்தது. இதனையடுத்து நேற்றுப் பிற்பகலில் பல்கலைக்கழகம் மூடப்பட்டது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rajai
    rajai

    எல்லா பல்கலைகழகங்களிலும் சிறப்பு பாதுகாப்புபிரிவு ஒன்று இடப்படவேன்டும்

    Reply