திருமலையில் நோயாளர்களுக்கு ஸ்ரீ ரெலோ நிவாரணப் பொருள் உதவி

sri_telo.jpgதிரு கோணமலை பொது அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முல்லைத்தீவுப் பொதுமக்களுக்கு திருகோணமலை தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தினர் சுமார் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

ஸ்ரீ ரெலோ இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கே.பரமேஸ்வரன் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர் பாண்டியன் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் இந் நிவாரணப் பொருட்களை நேரடியாக மருத்துவ மனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்தனர். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *