புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்லிருந்து பாதுகாப்பு தேடி 61 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு வருகை தந்த 61 சிவிலியன்களும் ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய ஜனவரி மாதம் முதல் இதுவரை 35,817 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு தேடி வருகை தந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.