இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை நியமிப்பது அரசாங்கத்தின் அரசியல் நியமனம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய வங்கி, ஒரு சுயாதீன நிறுவனமாக, அரசியல் தலைமையகமாக மாறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் டபிள்யூடி லட்சுமணன் தனது இராஜினாமா குறித்து ஊடகங்களுக்கு ஒரு தீவிரமான அறிக்கையை வெளியிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க ஒரு சுயாதீனமான திட்டத்தை முன்னெடுக்கும் போது அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதன் போது முன்னிலைப்படுத்தினார் .
அரசியல் தலையீடுகளால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லை என அவர் தெரிவித்தாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மத்திய வங்கி அரசியல் தளமாக மாறுவது ஒரு மோசமான நிலை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.