“நான் பிறந்தபோது அமைச்சர் பதவியுடன் பிறக்கவில்லை.இறக்கும்போது அமைச்சர் பதவியை என்னுடன் கொண்டு செல்லப்போவதில்லை. எனவும் தான் அரசியல் அரங்கில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைகள் குறித்து தான் அச்சமடையவில்லை.” என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் எப்போதும் எனது வாழ்க்கையில் எதற்கும் அச்சமடைந்ததில்லை, நீங்கள் நம்பாவிட்டால் எனது முகத்தில் அச்சம் கவலையை எப்போதாவது பார்த்தீர்களா என எனது தாயை கேளுங்கள். எனத்தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பசில்ராஜபக்ச ஆதரவளிப்பாரா..? என்ற கேள்விக்கு நான் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்து பதில் அளிக்கமாட்டேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றீர்களா..? என்ற கேள்விக்கு அமைதியும் ஒரு செய்தியை சொல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அமைச்சின் ஒரு பகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றனவே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் பிறந்தபோது அமைச்சர் பதவியுடன் பிறக்கவில்லை.இறக்கும்போது அமைச்சர் பதவியை என்னுடன் கொண்டு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் பிரதமரின் பரிந்துரையின் கீழ் எந்த அமைச்சரையும் மாற்றலாம் அனைத்து அமைச்சர்களும் அதற்கு கட்டுப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.