இலங்கையில் 1059 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நிலையில், இவர்களில் 186 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானவர்களில் 615 பேர் பெண்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 289 பேரில் 200 பேர் பெண்கள் எனவும் இப் பெண்களில் 99 வீதமானோர் தமது கணவர் மூலமே எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அத்துடன், கடந்த வருடத்தில் 30 எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதோடு, இந் நோய்த் தொற்றுக்கு உள்ளான 14 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சு மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், 72 வீதமான பாடசாலை மாணவர்கள் பல்வேறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் 29 வீதமானோர் ஆபாசப் படங்களை பார்வையிடுவதாகவும் மேலும், 18 வீதத்தினர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.