அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வந்துள்ளனர்! -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

lakshman_yapa_abeywardena.jpgமுல்லைத் தீவு மீதான மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று வரை அந்தப் பிரதேசத்திலுpருந்து 32 ஆயிரத்து 596 பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் ஆறாயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வருகின்றனர். மேலும் 30 அல்லது 40 ஆயிரம் பேர் மேலும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வருகின்ற அனைவரையும் இரண்டு நாட்களில் மாதிரிக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தேடி வருகின்ற அப்பாவித் தமிழ் மக்களை இலக்குவைத்தே  புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். பாதுகாப்புப் படையினர் இல்லாத போது வந்தவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் ஆதாரங்களுடன் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று அறியக் கொடுத்தது. எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் அரசாங்கம் எந்த நாட்டினதும் எந்த அமைப்பினதும் எவ்வித நிதியுதவியும் இல்லாத நிலையில் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதவிகளை வழங்க வரும்பினால் அரசாங்கம் ஊடாக அதனை மேற்கொள்ளலாம்;.
புதுக்குடியிருப்பு வைத்திசாலையில் இருந்த 240 நோயாளர்களையும் உதவியாளர்களையும் யுத்த சூன்ய பகுதிக்கு அழைத்து வருமாறு செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் அந்த நோயாளர்களை மேற்குக்கு அழைத்துச் சென்றனர். செஞ்சிலுவை சங்கத்தினர் அவ்வாறு செய்துவிட்டார்கள் என விட்டுவிடாமல் அரசாங்கம் உடனடியாக அவர்களை கிரீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தது. இதற்காக நான்கு மணி நேர யுத்த நிறுத்துமும் கடைபிடிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *