வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வாள்வெட்டு கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றையதினம் (25) இரவு 11 மணியளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் கூட வவுனியாவின் மதவுவைத்த குளத்தில் கூட இது போன்றதான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு புறமாக கல்வி வீழ்ச்சி . மறுவலமாக போதைப்பொருள் பாவணை என தமிழர் சமுதாயம் பாரிய சரிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இவை தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையுமே முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இருப்பவர்கள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா ..? – ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்..! போன்ற கோசங்ளை விட்டுவிட்டு உள்ளிருந்து சீர்திருத்தத்தை மேற்கொள்ள அனைவரும் அணிதிரள வேண்டும். மாற்றத்தை நாம் அயல்வீடுகளில் இருந்து தொடங்குவோம். அரசியல்தலைவர்களும் பாராளுமன்றில் உள்ள இனவாதத்தை மேலும் கிண்டி கிளராது சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் களமிறங்க வேண்டியது காலத்தின் தேவயும் கூட..!