இந்த ஆண்டின் முதலா வது சந்திர கிரகணம் இன்று (9ம் திகதி) தோன்றுகின்ற போதிலும், அதனை இலங் கை உட்பட உலகின் பெரும் பாலான நாடுகளில் பார்க்க முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவி யல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில்நுட்பத்திற் கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.
பூமியின் இருள் பகுதிக்குள் சந்திரன் பிரவேசிப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று மாலை 6.07 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் இரவு 10.10 மணி வரை இருக்கும் எனவும் அவர் கூறினார். இம்முறை சந்திரன் சாதாரண இருள் பகுதியால் பயணிப்பதால் தான் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. என்றாலும் இக்காலப் பகுதியில் சந்திரன் மங்கலாகத் தென்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வருடம் நான்கு சந்திர கிரகணங்கள் தோன்றவிருக்கின்றன. அவற்றில் முதலாவது சந்திர கிரகணமே இன்று தோன்றவிருக்கிறது. எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதியும், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியும், டிசம்பர் மாதம் 31ம் திகதியும் என்றபடி இச்சந்திர கிரகணங்கள் தோன்றும் என்றும் அவர் கூறினார்.