புலிகளின் பிடியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் அரசு விஷேட கவனம்

food.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பிடியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதமாக அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி இருப்பதாக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.

இது விடயமாக பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு காரணங்களினால் கடந்த சில தினங்களாக மீட்கப்படாத பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், துரிதமாக அங்கு உணவு அனுப்புவது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜனவரி 29 ஆம் திகதி 810 டொன் உணவுப் பொருட்கள் வன்னிக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதிக்கு உணவு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டன. அப்பகுதிக்கு துரிதமாக உணவுப் பொருட்கள் அனுப்புவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி வருகிறோம். இது குறித்து ஐ.நா. தொண்டு நிறுவனங்கள், உலக உணவுத் திட்டம் என்பவற்றுடனும் பேசி வருகிறோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *