இந்தியாவில் கடந்த 2 தினங்களாக சற்று குறைந்திருந்த கொரோனா தொற்று, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னர் 4 லட்சத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை, நேற்று முன்தினம் 3 லட்சத்து 68 ஆயிரமாகவும், நேற்று 3 லட்சத்து 57 ஆயிரமாகவும் குறைந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 780 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 34 லட்சத்து 87ஆயிரத்து 229 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.