விமானப் படையின் கிபிர் ஜெட் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த புலிகளின் கடற்புலித் தளபதி சூசையின் மறைவிடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 11 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி களமுனைச் செய்திகள் தெரிவிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் புலிகளின் கடற்புலி தளபதி சூசையும் அங்கே இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் புதுக்குடியிருப்பு திரணைப்பாலை என்ற இடத்தில் உள்ள பங்கர் ஒன்றின்மீதே நடத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலையே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விமானப் படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கிபீர் மற்றும் எப் 7 ரக ஜெட் விமானங்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.